25th October 2022
துதி நன்றி ஆராதனை
+++++++++++++++++++
பிதாவாகிய தேவனே
எங்கள் சரீரத்தின் கரங்களை உயர்த்தி உம்மை மகிமைப்படுத்துகிறோம்
குமாரனாகிய தேவன் இயேசுவே எங்கள் இருதயத்தில் ஆத்துமாவில் உம்மை கனப்படுத்துகிறோம்
பரிசுத்த ஆவியானவராகிய தேவனே எங்கள் வாயினால் நாவினால் உம்மை துதிக்கிறோம்
சங்கீதம் 121
துதி ஆராதனை
********************
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கச் செய்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 121:1
இதோ உறங்காமல் இஸ்ரவேலை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 121:4
இதோ தூங்காமல் இஸ்ரவேலை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி அல்லேலூயா
சங் 121:4
என் வலதுபக்கத்தில் எனக்கு நிழலாயிருக்குற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 121:5
என் ஆத்துமாவைக் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 121:7
இதோ உறங்காமல் என்னை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஓசன்னா
சங் 121:3
என் போக்கை இது முதற்கொண்டு என்றைக்கும் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 121:8
என் வரத்தை இது முதற்கொண்டு என்றைக்கும் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 121:8
என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
சங் 121:7
நன்றி ஆராதனை
**********************
என்னை காக்கிற கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 121:5
பகலிலே வெயிலால் என்னை சேதப்படுத்தாத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 121:6
இரவில் நிலவால் என்னை சேதப்படுத்தாத கர்த்தராகிய தேவனே உமக்கு கோடான கோடி நன்றி
சங் 121:6
தொழுகை ஆராதனை
*************************
வானத்தை உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து வரும் ஒத்தாசைக்காக தேவனே உம்மை தொழுது கொள்கிறேன்
சங் 121:2
பூமியை உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து வரும் ஒத்தாசைக்காக தேவனே உம்மை பணிந்து கொள்கிறேன்
சங் 121:2
என் காலைத் தள்ளாடவொட்டாத கர்த்தராகிய தேவனே உம்மை வணங்குகிறேன்
சங் 121:3
ஆமென் !
சத்தியமுள்ள தேவனே இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.
ஆமென் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக