வியாழன், 2 நவம்பர், 2017

உன் காலைத் தள்ளாடவொட்டார்

*வாக்குத்தத்தம்*

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.  தேவனுடைய கிருபையால் உங்களை இந்த  வாக்குத்தத்த செய்தியின் மூலம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தேவன் *சங்கீதம் 121ம் அதிகாரம் 3ம் வசனத்தை* வாக்குத்தத்தமாக கொடுக்கிறார்.  *'உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார்'* (சங்கீதம் 121:3).

தேவன் 'உன் காலைத் தள்ளாடவொட்டார்' என்று சொல்வது நம்முடைய நடைகளைக் குறிக்கிறது. எனவே தாவீது, 'என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்' (சங் 17:5) என்று சொல்லுகிறார்.  உங்களுடைய நடைகள் எப்படி இருக்கிறது? வேதம் துன்மார்க்கருடைய வழியில் நடவாதீர்கள் என்று நம்மை எச்சரிக்கிறது.

தேவன் 'உங்கள் கால்களை தள்ளாட விடமாட்டேன்' என்று வாக்குத்தத்தம் செய்கிறார். தேவன் உங்கள் கால்களை உறுதிப்படுத்தவே உங்களை இரட்சித்தார்.  'பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,   நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்' (சங் 40:2,3). 

நம்முடைய கால்களை உறுதியாய் இராதபடி மூன்று காரியங்கள் நம்மைத் தடுக்கிறது. 1. தள்ளாடுதல், 2. சறுக்குதல் 3. வழுவுதல்.

'ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று' (சங் 73:2). 'என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்' (சங் 17:5).

எப்பொழுது உங்கள் சரீரத்தில் பெலன் இல்லையோ அப்பொழுது உங்கள் கால்கள் தள்ளாடும். 'பலவான்களின் வில் முறிந்தது, தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்' (1சாமு 2:4). அதுபோல நீங்கள் எப்பொழுது பரிசுத்தத்தில், விசுவாசத்தில், தேவனைச் சார்ந்து கொள்வதில், தேவனுடைய அன்பில் குறைவுபட்டு பெலனற்று காணப்படும் போது உங்கள் கால்கள் தள்ளாடுகிறது. எப்பொழுத நீங்கள் பெலனற்றுத் தள்ளாடுகிறீர்களோ அப்பொழுது நீங்கள் தோல்விகளைச் சந்திக்கிறீர்கள், உங்கள் சத்துருக்கள் உங்களை மேற்கொள்கிறார்கள். 'அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்' (சங் 13:4). 

இன்றைக்கு தேவன் உங்கள் தள்ளாடுகிற கால்களை பெலப்படுத்தும்படியாய் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார்.  'விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்' (யோபு 4:4).

'கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் உத்தமத்திலே நடக்கிறேன், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை' (சங் 26:1).  உத்தமத்திலே நடக்கிறவர்களும், கர்த்தரை நம்புகிறவர்களும் தள்ளாடுவதில்லை என்று தாவீது சொல்லுகிறார்.  நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில், உங்கள் வியாபாரத்தில், வேலை செய்யும் ஸ்தலத்தில், மற்றவர்களுக்கு, தேவனுக்கு உத்தமமாய்க் காணப்படுகிறீர்களா?

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, "நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்' (ஆதி 17:1-2). ஆபிரகாம் கர்த்தரை நம்பி உத்தமமாய் வாழ்ந்தான்; எனவே அவன் ஒரு போதும் தள்ளாடவில்லை.  தேவன் வாக்குத்தத்தம் செய்ததைப் பெற்றுக்கொண்டான்.
நீங்கள் கர்த்தரை நம்பி உத்தமமாய் இருங்கள். தேவன் உங்களுக்குச் சொன்னதை நிறைவேற்றுவார்.  அவைகள் இனி தாமதிப்பதில்லை.   'கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்' (சங் 55:22).
   
எப்பொழுது நீங்கள் கர்த்தரை விட்டு உலகத்தாராய், துன்மார்க்கமாய், இருட்டில் வாழ்கிறீர்களோ அப்பொழுது உங்கள் கால்கள் சறுக்கும்.   இன்றைக்கு தேவன் உங்கள் கால்கள் சறுக்காதபடி உங்களைக் காக்கிறார். 'என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது' (சங் 94:18). தேவனுடைய கிருபையே உங்கள் கால்கள் சறுக்காதபடி காக்கிறது.

நோவா தேவனுக்கு பயந்து நடந்தான் அவனுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.  தேவனுக்குப் பயந்து நடவுங்கள்.  நோவாவைப் போல கிருபையைப் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் கால்கள் சறுக்காது. 

பல நேரங்களில் உங்களிடத்தில் உருவாகும் பெருமையின் நிமித்தமே கர்த்தருடைய கிருபையை நீங்கள் இழந்து போகிறீர்கள்.  தேவன் உங்களை உயர்த்தும் போது அவருடைய கரத்தின் கீழ் தாழ்மையாய் அடங்கி இருங்கள். 'ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்' (1பேது 5:6).

உங்கள் கால்கள் வழுவாதபடி தேவன் உங்கள் வழிகளை அகலமாக்குகிறார்.  'என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்' (2சாமு 22:37). எப்பொழுது தேவன் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தாரோ அப்பொழுது தாவீது இந்த வார்த்தையைச் சொல்லுகிறார். 

உங்களுடைய வாழ்க்கையிலும் பல காரியங்களில் தடைகளை நீங்கள் சந்திக்கிறீர்கள்.  உங்களுக்கு முன்பாக எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு காரியங்கள் வாய்க்காமல் காணப்படுகிறது.  இன்றைக்கு தேவன் உங்கள் காரியங்களை வாய்க்கும்படியாய் உங்கள் வழியை அகலமாக்குகிறார்.  இனி நீங்கள் வழுகிப்போவதில்லை. தேவன் உங்களுக்கு சமாதானத்தை கொடுக்கும்படி இன்றைக்கு உன் வழிகளை அகலமாக்குகிறார்.  உன்னுடைய சமாதானத்தைக் கெடுத்துக்கொண்டிருந்த பிரச்சனைகளும் போராட்டங்களும் இன்றோடு ஒழிந்தது.  'இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது, உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்.   இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.  உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்கநாட்கள் முடிந்துபோம்' (ஏசா 60:18-20).

தேவன் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தின் படி உங்கள் கால்களைத் தள்ளாட விடமாட்டார்.  தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள் அற்புதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். அவருடைய வார்த்தை ஒரு போதும் வெறுமையாகத் திரும்பாது.     'வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.'  (யூதா 1:24-25.)

- Pastor Daniel karthikeyan,
Senior Pastor - Church of the Firstborn.

கானானியனாகிய சீமோன் SIMON

கானானியனாகிய சீமோன்  SIMON

இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர் கானானியனாகியசீமோன்.

இவரை தீவிரவாதியாகிய சீமோன் என்றும், செலோத்தே எனப்படும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிறது.

இவருடைய சொந்த ஊர் கானாவூர்.

எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார்.

கானாவூரில் தான் இயேசு தனது முதலாவது அற்புதத்தைச் செய்தார்.

ஒரு திருமண வீட்டில் திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. இயேசு ஆறு கற்சாடிகளில் நிரப்பப்பட்ட தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார். 

இயேசுவின் சீடர்களில் இரண்டு பேருக்கு சீமோன் எனும் பெயர் உண்டு.

ஒருவர் சீமோன் பேதுரு. இயேசுவின் நெருங்கிய சீடர்களில் ஒருவர்.

அவரைப்பற்றி நிறைய செய்திகள் விவிலியத்தில் உண்டு.

கானானியனாகிய சீமோனின் பெயரோ விவிலியத்தில் அதிகம் இல்லை.

ஆனாலும் பணிவாழ்வைப் பொறுத்தவரை இவர் பிரமிக்க வைத்தார்.

இயேசு இறத்து, உயிர்த்து தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்பியபின் அவர்கள் துணிச்சலின் சிகரம் தொட்டார்கள்.

இயேசுவைப் பற்றி அறிவிக்க சீமோன் வடஆப்பிரிக்கப் பகுதிகளுக்குச் சென்றார்.

எகிப்து, சைரீன், மாரிடானியா, லிபியா போன்ற இடங் களில் அவர் தன்னுடைய நற்செய்தி அறிவித்தலை நடத்தினார்.

செலோத்துகள் என்னும் தீவிரவாதிகளின் குழுவில் இவர் இருந்ததாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகுந்த நெஞ்சுரமும், துடிப்பும் மிக்கவர்கள் இந்த செலோத்துகள். அந்த தீவிரம் அவருடைய நற்செய்தி அறிவித்தலிலும் வெளிப்பட்டது. 

கார்த்தேஜ் என்னும் நகரம் வட ஆப்பிரிக்காவில் இருந்தது.

அங்கே தன்னுடைய பணியை தீவிரப்படுத்தினார் சீமோன்.

நகரில் கிறிஸ்தவ மதம் காட்டுத் தீ போல பரவியது. சீமோன் மகிழ்ந்தார்.

எதிர்ப்பட்ட இடர்களை எல்லாம் ஜெபத்தினாலும், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தகர்த்து தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார் சீமோன்.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஓரளவு கிறிஸ்தவ மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், பலரை போதிக்கும் பணிக்காகவும் தேர்ந்தெடுத்தார்.

அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சீமோன் ஸ்பெயின் நாட்டுக்குப் பயணமானார்.

கி.பி. ஐம்பதில் பிரிட்டனில் கிளாஸ்டன்பரி என்னுமிடத்தில் கிறிஸ்தவத்தைப் போதிக்கத் தொடங்கினார் சீமோன்.

அப்போது அந்த நாடு ரோமர்களின் ஆளுகைக்குள் இருந்தது! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ரோமர்கள் லண்டனியம் என்னும் கோட்டையைக் கட்டி தங்கினார்கள்.

அந்த லண்டனியம் தான் இன்று லண்டன் என்று அழைக்கப்படுகிறது.

சீமோனின் மறை பரப்பும் பணி ரோமர்களிடமும், லத்தீன் மொழி பேசிய பூர்வீக வாசிகளிடமும் நடந்தது.

ரோமர்கள் பலர் சீமோனை எதிர்த்தார்கள். ஆனாலும் அப்போஸ்தலர்களுக்கே உரிய மன திடமும், துணிச்சலும் சீமோனிடமும் இருந்ததால் அவர் கலங்கவில்லை.

இயேசுவுக்காக இடர்கள் பட்டால் அது பெரும் பேறு என்று கருதினார்.

கி.பி. 59  கி.பி. 62–க்கு இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் வந்திருந்த ரோமர்களுக்கும், போவாதீசியர் களுக்கும் கடும் சண்டை நடந்தது.

அதில் ரோமர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் சீமோனும் பிரிட்டனை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்துக்கே திரும்பி வந்தார்.

பாலஸ்தீனத்திலிருந்து மெசபடோமியா பகுதிக்குச் சென்று மறைப்பணி ஆற்றினார் சீமோன்.

அங்கு சில காலம் பணியாற்றிய சீமோன், இயேசுவின் இன்னொரு அப்போஸ்தலரான ததேயுவைச் சந்தித்தார்.

ததேயுவும் அந்தப் பகுதியில் பணிசெய்து வந்தார். இறைப்பணிக்காய் அடிப்படை கட்டமைப்பை அங்கே உருவாக்கிவிட்டு இருவரும் பாரசீகம் நோக்கிப் பயணமானார்கள்.

பாசசீகத்தில் சுவானிர் என்னுமிடத்தில் நடந்த சிலை வழிபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் ததேயு.

ததேயுவைச் சிறைபிடித்த அதிகாரிகள் அவரைக் கொல்ல முடிவு செய்தார்கள்.

ததேயு அப்போதும் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி போதித்தார். அவர்கள் ததேயுவை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்கள். 

ததேயுவுடன் பணி செய்து வந்த சீமோனும் அரசின் பார்வைக்குத் தப்பவில்லை. சீமோன் சிறைபிடிக்கப்பட்டார்.

ரம்பத்தால் அறுத்துக் கொல்லுங்கள் எனும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“இயேசுவுக்காய் இறப்பது பெரும்பேறு. நீங்கள் மனம் திரும்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே ரம்பத்தால் அறுபட்டு இறந்து போனார் சீமோன்.

பைபிளில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர், அமைதியான நபர் சீமோன்.

ஆனால் தூய ஆவியின் நிரப்பு தலுக்குப் பின்பு மரணத்தைக் கூட துணிச்சலுடன் எதிர்கொள்ளும் வல்லமை பெற்றார்.

ஊரையும், நாட்டையும் விட்டு விட்டு கண்காணாத தூரத்துக்குச் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்.

நாம் இயேசுவின் வழியில் வாழ்வதற்கும், இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கும் முதலில் தூயஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவேண்டியது அவசியம்.

இயேசுவின் பால் கொள்ளும் உறுதியானவிசுவாசமே நம்மை இறை பணிகளில் உறுதியுடன் ஈடுபடச் செய்யும்.

இந்தஅடிப்படைச் சிந்தனைகளை அப்போஸ்தலர் சீமோன்
வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.

|The WORD| : கண்கூடான பலன்!

|The WORD| : கண்கூடான பலன்!

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரெயர் 11:6)

*காணமுடியாத விசுவாசமானது, கண்கூடான பலனைக் கொண்டுவருகின்றது!* கர்த்தராகிய தேவனும்கூட தம் பிள்ளைகளுக்கு நற்பலன்களை அளித்து, *அதன்வழியாகத் தம் நாமத்தை மகிமைப்படுத்தவும்* விரும்புகிறவர்!

விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதது! மட்டுமல்ல அவர் பிரியப்படுகிறவைகளையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது! ஆனால், முழு விசுவாசத்தையும் தேவன்மேல் வைக்கும்பட்சத்தில், தேவன் அளிக்கும் பலன் நிச்சயமாய் நம்மை வந்தடைகிறது!

பொதுவாக தேவநன்மைகளுக்கு பணம், பொருள், வேலை, சம்பளம் என ஓர் உருவத்தை நாம் வைத்துவிடுவதால், மெய்யான தேவநன்மைகளை நம்மால் காண இயலுவதில்லை! அவை ஒருவேளை *நாம் இருக்கும் சூழ்நிலைகளிலேயே சுகம், பெலன், ஜீவன், மகிழ்ச்சி, சமாதானம், தன்னிறைவு என இருக்கலாம்! அவை சாதாரணக் கண்களுக்கு அல்ல, விசுவாசக் கண்களுக்கு கண்கூடானவைதான்!* ஆமென்!!!
___________________________

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வேதாமத்தில் செடிகள்

🌿🌱வேதாமத்தில் செடிகள்🌱🌿
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🌿யோவான் 15:1 =
மெய்யான திராட்சச்செடி
🌿ஓசியா 10:1 =
பலனற்ற திராட்சச்செடி
🌿எரேமியா 2:21 =
காட்டுத்திராட்சச்செடி
🌿யாத்திராகமம் 3:2 =
முட்செடி
🌿சங்கீதம் 137:2 =
அலரிச்செடி
🌿1இராஜாக்கள் 19:4 =
சூரைச்செடி
🌿எண்ணாகமம் 20:5 =
மாதளஞ்செடி
🌿யோனா 4:6 =
ஆமணக்குச் செடி
🌿சகரியா 1:8 =
மிருதுச்செடி
🌿1 நாளாகமம் 14:14 =
முசுக்கட்டைச்செடி
🌿உன்னதப்பாட்டு 4:14 =
கந்தவர்க்கச்செடிகள்
🌿லூக்கா 6:44 =
நெருஞ்சிச்செடி
🌿உன்னதப் பாட்டு 4:13 =
மருதோன்றிச்செடிகள்,
நளதச் செடிகள்.
🌿☘🌱☘🌿🌱☘🌿🌱☘🌿

திங்கள், 31 ஜூலை, 2017

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் இரத்தசாட்சி மரணங்கள

*"இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் இரத்தசாட்சி மரணங்கள்"*

*1,மத்தேயு- எத்தியோப்பிய நாட்டில் குடல் சரிய குத்தப்பட்டு இறந்ததார்.*

*2, மாற்கு- அலெக்சாண்டிரியாப் பட்டணத்தில் தெரு வீதிகளில் நாயைப் போல் இழுத்துச் சென்று சாகடித்தார்கள்.*

*3, பெரிய யாக்கோபு- எருசலேம் நகரில் தலையை வெட்டிக் கொன்றார்கள்.*

*4, லூக்கா- கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.*

*5, யோவான்- கொதிக்கும் எண்ணெய் உள்ள இரும்புச் சட்டியில் தூக்கிப் போட்டும் சாகாததால், பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் இரகசியமாக தரிசன நூலை எழுதினார். பின்பு ஆள் ஆரவாரமற்ற அத்துவானக் காட்டில் பட்டினி கிடந்து கொடிய வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார்.*

*6, அந்திரேயா- சிலுவையில் அறைந்து அதிலிருந்தவாறே பிரசங்கிக்கச் சொன்னார்கள் இயேசுவின் போதனைகளை பிரசங்கித்துக் கொண்டே மரித்தார்.*

*7, பர்த்தலோமேயு- உயிரோடு தோல் உரிக்கப்பட்டு உயிரைவிட்டார்.*

*8, தோமா- சென்னையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.*

*9, யூதா- மரத்தில் கட்டி வைத்து அம்புகளை எய்து கொன்றார்கள்.*

*10, பர்னபா- தெசலோனிக்கே என்ற நகரில் கல்லெரியப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*11, பேதரு- சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*12, சின்னயாக்கோபு- கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளியும் சாகாததால் தடியால் அடித்து சித்திரவதை செய்து சாகடித்தார்கள்.*

*13, பவுல்- ரோமச் சிறையில் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருந்த வேளையிலும் பாட்டுபாடி சுவிசேஷம் அறிவித்தார். நீரோ என்ற ரோமப் பேரரசால் தலை துண்டிக்கப்பட்டு மாண்டார்.*

*இதை படிக்கும் அன்பானவர்களே இதில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்த்துவுக்குள் வருகிற  பாடுகளையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக் கொல்லும் போது தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பார் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்வோம். மேலே நாம் படிக்கும் போது இத்தனை இரத்த சாட்சிகளை பார்த்தோம் அல்லவா பயமின்றி ஊழியம் செய்வோம்.*

*கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.*



-------------


இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்கள் : ( மத்தேயு - 10 : 1 - 4 ) 


1. சீமோன் பேதுரு : ( கிமு 1 - கிபி 67 ) 


* கி பி 67-ல் ரோமில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


2. அந்திரேயா : 

  

* பட்ராஸ் என்னும் கிரேக்க நாட்டுப் பட்டணத்தில் பெருக்கல் வடிவான சிலுவையில் இரத்த சாட்சியாக மரித்தார். 


3. செபெதேயுவின் குமாரன் யாக்கோபு :


* கி பி 44-ல் ஏரோது ராஜாவினால் பட்டயத்தினால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


4. யோவான் : 


* வெளிப்படுத்துதல் புத்தகத்திற்குப் பின் கிபி 100-ல் எபேசுவில் இயற்கை மரணம் எய்தார் . 


5. பிலிப்பு : ( கி பி 80 ) 


* துருக்கி நாட்டில் கி பி 80 - ல் சிலுவையில் அறையுண்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


6. பர்த்தொலொமேயு :


* இந்தியாவின் வடதிசை மட்டும் வந்து சுவிசேஷத்தை அறிவித்து பின் தற்போதைய அல்பேனியா வரையும் சுவிசேஷத்தை அறிவித்தார். 


* அல்பேனியாவின் ராஜாவினால் தோலைக் கிழித்து துன்புறுத்தப்பட்டு பின் சிலுவையில் அறைந்து சிரைச்சேதம் செய்யப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


7. தோமா : [ கி பி 52 ]


* கி பி 52 -ல் தென் இந்தியாவிற்கு வந்து சுவிசேஷத்தை அறிவித்தார். 


* இவர் ஜெபம் செய்யும் வேளை ஈட்டியால் பின்புறமாகக் குத்தப்பட்டு கி பி 72 - ல் இரத்த சாட்சியாக மரித்தார். 


8. மத்தேயு [ ஆயக்காரன் ] :


* தற்போதைய துருக்கி நாட்டில் பட்டயத்தால் குத்தப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


9. அல்பேயுவின் குமாரன் யாக்கோபு : 


* எருசலேமில் கற்களால் எறியுண்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


10. ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு : 


* லெபனோன் நாட்டில் கி பி 67 - ல் கோடாரியினால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


11. கானானியனாகிய சீமோன் : 


* வாளால் பாதியாக வெட்டப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். 


12. யூதாஸ்காரியோத்து :


* இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்தது பின் மனந்திரும்பாது தற்கொலை செய்து கொண்டான் . அநீதியின் பங்கை அடைந்தான். 



* வெளிப்படுத்தின விசேஷம் [ யோவான் ] - 20 : 4


4. " அன்றியும் , நான் சிங்காசனங்களைக் கண்டேன் ; அவைகளின் மேல் உட்கார்ந்தார்கள் ; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப் பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும் , மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமல் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். 


          ஆமென்🙏🙏😇

வியாழன், 20 ஜூலை, 2017

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இயல்பு பற்றிய வேத வசனங்கள்:

பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். - ஆதியாகமம் 1:14

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. - ஆதியாகமம் 1:15

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். - ஆதியாகமம் 1:16

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், - ஆதியாகமம் 1:17

பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:18

பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; - சங்கீதம் 136:7

பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. - சங்கீதம் 136:8

இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; - சங்கீதம் 136:9

சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. - பிரசங்கி 1:5

அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது. - யோசுவா 10:13

இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது. - ஏசாயா 13:9

வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோகும்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும். - ஏசாயா 13:10

தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று. - ஏசாயா 38:8

சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. - ஆபகூக் 3:11

பூமிக்கு கீழே உள்ள பூமியின் இயல்பு பற்றிய வேத வசனங்கள்

பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார். - யோபு 9:6

அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். - யோபு 26:7

அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும். - யோபு 26:10

அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். - யோபு 28:24

அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். - யோபு 37:3

அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: - யோபு 38:1

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. - யோபு 38:4

அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. - யோபு 38:5

அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? - யோபு 38:6

அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:7

உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளை கொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? - யோபு 38:13

பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. - ஆதியாகமம் 1:9

தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:10

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். - 1 சாமுவேல் 2:8

கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. - 2 சாமுவேல் 22:16

அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. - சங்கீதம் 18:15

பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) - சங்கீதம் 75:3

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. - சங்கீதம் 93:1

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். - சங்கீதம் 96:9

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். - சங்கீதம் 96:10

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. - சங்கீதம் 96:11

நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. - சங்கீதம் 102:25

பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். - சங்கீதம் 104:5

அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. - சங்கீதம் 104:6

அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. - சங்கீதம் 104:7

அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. - சங்கீதம் 104:8

அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர். - சங்கீதம் 104:9

தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. - சங்கீதம் 136:6

அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், - நீதிமொழிகள் 8:27

உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், - நீதிமொழிகள் 8:28

சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், - நீதிமொழிகள் 8:29

ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். - ஏசாயா 11:12

அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். - ஏசாயா 40:22

நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், - ஏசாயா 43:6

நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். - தானியேல் 4:10

அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. - தானியேல் 4:11

பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். - யோனா 2:6

மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: - மத்தேயு 4:8

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்; - மத்தேயு 4:9

வலுவாய்த் தொனிக்கும் எக்காளசத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். - மத்தேயு 24:31

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன். - யோவான் 17:24

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். - வெளிப்படுத்தின விசேஷம் 1:7

இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். - வெளிப்படுத்தின விசேஷம் 7:1

பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். - வெளிப்படுத்தின விசேஷம் 20:8

வானம் பூமி அவற்றின் உறவு பற்றிய வேதவாக்கியங்கள்

அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். - யோபு 9:8

அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். - யோபு 22:14

வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ? - யோபு 37:18

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:1

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். - ஆதியாகமம் 1:2

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. - ஆதியாகமம் 1:3

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். - ஆதியாகமம் 1:4

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:5

பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். - ஆதியாகமம் 1:6

தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. - ஆதியாகமம் 1:7

தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:8

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. - சங்கீதம் 19:1

ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். - சங்கீதம் 104:2

தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். - சங்கீதம் 104:3

அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், - நீதிமொழிகள் 8:27

அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். - ஏசாயா 40:22

உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். - ஏசாயா 44:24

நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். - ஏசாயா 45:12

என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். - ஏசாயா 48:13

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? - ஏசாயா 66:1

அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. - எசேக்கியேல் 1:26

அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். - ஆமோஸ் 9:6

பூமி உருண்டையா சக்கரமா ?

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். - உபாகமம் 7:6

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். - 1 சாமுவேல் 2:8

பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர். - 1 நாளாகமம் 16:30

பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்? - யோபு 34:13

அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார். - யோபு 37:12

அவர் பூவுலகை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார். - சங்கீதம் 9:8

ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூவுலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். - சங்கீதம் 19:4

உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. - சங்கீதம் 77:18

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. - சங்கீதம் 93:1

கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். - சங்கீதம் 96:10

அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. - சங்கீதம் 97:4

சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. - சங்கீதம் 98:7

பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். - ஏசாயா 18:3

என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். - ஏசாயா 26:9

நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை. - ஏசாயா 26:18

ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது. - ஏசாயா 34:1

அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். - ஏசாயா 40:22

அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார். - எரேமியா 51:15

சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள். - புலம்பல் 4:12

இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. - அப்போஸ்தலர் 19:17

என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். - அப்போஸ்தலர் 24:5

இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. - ரோமர் 10:18

என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். - வெளிப்படுத்தின விசேஷம் 3:10