|The WORD| : கண்கூடான பலன்!
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரெயர் 11:6)
*காணமுடியாத விசுவாசமானது, கண்கூடான பலனைக் கொண்டுவருகின்றது!* கர்த்தராகிய தேவனும்கூட தம் பிள்ளைகளுக்கு நற்பலன்களை அளித்து, *அதன்வழியாகத் தம் நாமத்தை மகிமைப்படுத்தவும்* விரும்புகிறவர்!
விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதது! மட்டுமல்ல அவர் பிரியப்படுகிறவைகளையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது! ஆனால், முழு விசுவாசத்தையும் தேவன்மேல் வைக்கும்பட்சத்தில், தேவன் அளிக்கும் பலன் நிச்சயமாய் நம்மை வந்தடைகிறது!
பொதுவாக தேவநன்மைகளுக்கு பணம், பொருள், வேலை, சம்பளம் என ஓர் உருவத்தை நாம் வைத்துவிடுவதால், மெய்யான தேவநன்மைகளை நம்மால் காண இயலுவதில்லை! அவை ஒருவேளை *நாம் இருக்கும் சூழ்நிலைகளிலேயே சுகம், பெலன், ஜீவன், மகிழ்ச்சி, சமாதானம், தன்னிறைவு என இருக்கலாம்! அவை சாதாரணக் கண்களுக்கு அல்ல, விசுவாசக் கண்களுக்கு கண்கூடானவைதான்!* ஆமென்!!!
___________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக